ஆப்நகரம்

ஓகி புயல் பற்றி பயமுறுத்தும் பஞ்சாங்கத் தகவல்

ஹேவிளம்பி ஆண்டிற்கான ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் புயல்,வெள்ளச் சேதம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.

TNN 30 Nov 2017, 7:06 pm
சென்னை: ஹேவிளம்பி ஆண்டிற்கான ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் புயல்,வெள்ளச் சேதம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil arkadu panchangam predicts shocking facts about cyclone ockhi
ஓகி புயல் பற்றி பயமுறுத்தும் பஞ்சாங்கத் தகவல்


கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ள ஓகி புயல் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை கனமழையால் புரட்டிப்போட்டு வருகிறது. இந்நிலையில் ஆற்காடு பஞ்சாங்கம் இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்புள்ள புயல், மழை, நிலநடுக்கம் பற்றி பயமுறுத்தும் தகவல்களைக் கூறியுள்ளது.

ஹேவிளம்பி ஆண்டுக்கான ஆற்காடு ஸ்ரீ சீதாராமஹனுமான் சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில், "இந்த ஆண்டு முக்குறுணி மழை பெய்யும். 10 பங்கு சமுத்திரத்திலும் 6 பங்கு காடுகளிலும் 4 பங்கு பூமியிலும் பெய்யும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடல் கொந்தளிப்பும், கடல் சீற்றங்களும் ஏற்படும்." என்று கூறப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி, சென்னை, நாகை, காரைக்கால், கன்னியாகுமரி, திருச்செந்தூர் ஆகிய கடலோர பகுதிகளில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் மிகப்பெரிய பொருட்சேதமும் உயிர்சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி