சென்னை: சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் பணியாற்றி வந்த காவலர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் கோபிநாத். அவருக்கு வயது 25. இந்நிலையில், ஆயுதப்படை வளாகத்தில் இரவுப் பணியில் இருந்த அவர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியாகும். கடந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தூத்துக்குடி காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்தார். அதன்பின்னர் பழனி பட்டாலியனில் பணி அமர்த்தப்பட்ட அவர், பரங்கிமலை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
பணிச்சுமை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் அதிகரித்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Armed Force police commited suicide in chennai
சென்னை பரங்கிமலை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தவர் கோபிநாத். அவருக்கு வயது 25. இந்நிலையில், ஆயுதப்படை வளாகத்தில் இரவுப் பணியில் இருந்த அவர், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட கோபிநாத்தின் சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியாகும். கடந்த 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தூத்துக்குடி காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்தார். அதன்பின்னர் பழனி பட்டாலியனில் பணி அமர்த்தப்பட்ட அவர், பரங்கிமலை ஆயுதப்படைக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
பணிச்சுமை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன அழுத்தம் அதிகரித்து இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Armed Force police commited suicide in chennai