ஆப்நகரம்

திருவண்ணாமலை: வயதான தாயை கொல்ல முயன்ற ராணுவ வீரர்!

திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் பெற்ற தாயையே ராணுவ வீரர் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Mar 2018, 7:05 pm
திருவண்ணாமலை கண்ணமங்கலத்தில் பெற்ற தாயையே ராணுவ வீரர் ஒருவர் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil army man held in tn for opening fire on his mother over property dispute
திருவண்ணாமலை: வயதான தாயை கொல்ல முயன்ற ராணுவ வீரர்!


திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த கொங்கராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி காசியம்மாள்(78). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மன்கள் உள்ளனர். மூத்த மகன் சரவணன் ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். இளைய மகன் கதிரவன் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

கணவர் இறந்த பிறகு காசியம்மாள் தனியாக வசித்து வருகிறார். மூத்த மகன் சரவணன் சென்னயைில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், காசியம்மாளுக்கும் இளைய மகன் கதிரவனுக்கும் இடையே சொத்து பிரச்னை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுமுறையில் ஊருக்கு வந்த கதிரவன், காசியம்மாளிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை, ரேசன்கார்டு ஆகியவற்றை கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு காசியம்மாள் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், துப்பாக்கியால் சுட்டார். சுதாரித்துக் கொண்ட காசியம்மாள் உடனே குனிந்து கொண்டதால், குறி தவறி உயிர் தப்பினார். பின்னர், துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், கதிரவனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, காசியம்மாளை காப்பாற்றினர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கதிரவனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி