ஆப்நகரம்

உடல்நிலை மோசமாயிடுச்சு; பேரறிவாளன் சிகிச்சைக்கு அற்புதம்மாள் மனு...!

உடல்நலக்குறைவு காரணமாக, பேரறிவாளனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

TNN 18 Jun 2017, 1:09 pm
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக, பேரறிவாளனை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil arputhammal applied for perarivalan treatment to minister
உடல்நிலை மோசமாயிடுச்சு; பேரறிவாளன் சிகிச்சைக்கு அற்புதம்மாள் மனு...!


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தாய் அற்புதம்மாள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்.

இந்த சூழலில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியை, அற்புதம்மாள் சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மகன் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்றும், அவரை சென்னை ராஜுவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Arputhammal applied for Perarivalan treatment to Minister.

அடுத்த செய்தி