ஆப்நகரம்

சிறையில் வாடும் பேரறிவாளனுடன் அற்புதம்மாள் சந்திப்பு

ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் வேலூர் மத்திய சிறையில் சந்தித்தார்.

TNN 13 Oct 2016, 4:32 pm
வேலூர்: ராஜீவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள் வேலூர் மத்திய சிறையில் சந்தித்தார்.
Samayam Tamil arputhammal meets perarivalan at vellore central prison
சிறையில் வாடும் பேரறிவாளனுடன் அற்புதம்மாள் சந்திப்பு


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் பேரறிவாளன் தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில், பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் தீவிரமாக போராடி வருகிறார். இது தொடர்பாக பலமுறை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இதனிடையே, கடந்த செப்டம்பர் மாதம் சிறை வளாகத்தில் பேரறிவாளனை சக கைது தாக்கியதில், அவரது தலையில் 6 தையல்கள் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி