ஆப்நகரம்

அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும் : நாராயணசாமி!

அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Sep 2018, 9:24 pm
புதுச்சேரி: அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 8


தூத்துக்குடிக்கு சென்றிருந்த பாஜக தலைவர் தமிழிசை செளந்தராஜன், விமானம் ஏற விமான நிலையத்திற்கு செல்லும் போது, அவருடன் பயணம் செய்ய இருந்த ஷோபியா என்ற பெண் பாசிச பாஜக ஒழிக.... என கோஷம் எழுப்பினார்.

இதையடுத்து, தமிழிசை கொடுத்த புகாரின் பேரில் ஷோபியா கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தார். இந்த நிலையில், ஷோபியாவிற்கும் பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘
அதிகாரத்தில் உள்ளவர்கள் விமர்சனங்களை சகித்துக்கொள்ள வேண்டும். மாறாக மக்களின் குரலை நசுக்க கூடாது. இல்லை என்றால், அதற்கு பெயர் சர்வாதிகாரம், மக்களாட்சி இல்லை. ’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி