ஆப்நகரம்

பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்: டிடிவி தினகரன்

பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் என இரட்டை இல்லை லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள டிடிவி தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

TNN 29 Apr 2017, 6:37 pm
சென்னை: பொய் வழக்கில் கைது செய்துள்ளனர் என இரட்டை இல்லை லஞ்சப் புகாரில் சிக்கியுள்ள டிடிவி தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
Samayam Tamil arrested in false case ttv dhinakarans answer to reporters question
பொய் வழக்கில் கைது செய்துள்ளனர்: டிடிவி தினகரன்


இரட்டை இலை சின்னதை பெற்று தர லஞ்சம் வாங்கியதாக தலைநகர் டெல்லியில் சுகேஷ் சந்திரா என்பவர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் ரூ.1.30 கோடி ரூபாயையும் டெல்லி போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், டிடிவி தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது. அதனடிப்படையில், தினகரனிடம் விசாரணை நடத்திய டெல்லி போலீசார், அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தினகரனிடம் டெல்லி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்திய டெல்லி போலீசார், இன்று இரவு 7.40 மணி விமானத்தில் மீண்டும் டெல்லி கொண்டு செல்கின்றனர். அதற்காக தினகரனை போலீசார் சென்னை விமான நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவரிடம், பொய் வழக்கில் உங்களை கைது செய்துள்ளார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் ஆம் என்ற பதிலை கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
Arrested in False case, TTV Dhinakaran's answer to reporters question

அடுத்த செய்தி