ஆப்நகரம்

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: கருப்புக் கொடியோடு தயாராகும் காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 7 Apr 2023, 2:44 pm
பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை தந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
Samayam Tamil ks alagiri


கே.எஸ்.அழகிரி

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “பிரதமரின் ஜனநாயக எதிர்ப்பு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்காக கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படுகிறது. அதானி குறித்து எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பாஜக அரசால் பதில் சொல்ல முடியவில்லை. அதற்காக அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள். ஜனநாயக குரல்வளையை நெறிக்கும்விதமாக செயல்படும் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றை கண்டித்து இந்த போராட்டம் காந்திய வழியில் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை

இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில் ," ராகுல் காந்தியின் பதவியை இழக்கச் செய்த, அரசியல் ரீதியாக அவரை எதிர்கொள்ள முடியாத, இந்திய ஜனநாயகத்தை சிதைத்த பிரதமர் மோடியின் தமிழகம் வருகையை கண்டித்து அவர் செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்." என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: களத்தில் இறங்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்!
பிரதமர் பங்குபெறும் நிகழ்ச்சிகள்!

  • பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 8) மாலை 3 மணியளவில் சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை திறந்துவைக்கிறார்.

  • மாலை 4 மணியளவில் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

  • தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி? மீண்டும் இரட்டை இலைக்கு சிக்கலா?
  • ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

  • மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி