ஆப்நகரம்

உரிய நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவார்: பொன்னார் தகவல்

உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி உரிய நேரத்தில் வருவார் என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TNN 16 Oct 2016, 6:05 pm
சென்னை: உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேட்டறிய பிரதமர் மோடி உரிய நேரத்தில் வருவார் என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil as soon as modi will come to meet jaya pon radhakrishnan
உரிய நேரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருவார்: பொன்னார் தகவல்


கடந்த மாதம் 22-ம் தேதியன்று இரவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும் என தேசிய கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைக்கு நேராக சென்று முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க பிரதமர் மோடி உரிய நேரத்தில் தமிழகம் வருவார் என பாஜக மூத்த தலைவரும், மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அப்பல்லோவுக்கு நேற்று நேரில் சென்று முதல்வரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர்.

அதேபோல், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

As soon as Modi will come to meet jaya: Pon.Radhakrishnan JayaHealth #ApolloHospitals #Jayalalitha #DACase #Jayaverdict #JayalalithaHealthCondition

அடுத்த செய்தி