ஆப்நகரம்

தலைமை ஆசிரியர் திட்டியதால் வகுப்பிலேயே ஆசிரியை தற்கொலை முயற்சி..!

சிவகங்கையில் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்கிய அறிவியல் ஆசிரியை கெமிக்கலை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

Samayam Tamil 27 Nov 2019, 4:35 pm
சிவகங்கை: முத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பாட ஆசியையாக பனி புரிபவர் சங்கீதா. அதே பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் கீதாஞ்சலி. இந்நிலையில் கீதாஞ்சலி சங்கீதாவை அவதூறாக திட்டி மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தியதாக தெரிகிறது.
Samayam Tamil தலைமை ஆசிரியர் திட்டியதால் வகுப்பிலேயே ஆசிரியை தற்கொலை முயற்சி..!


இதனால் மனமுடைந்த சங்கீதா பள்ளி ஆய்வறையில் இருந்த ரசாயனத்தை குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். பின்பு மயங்கி விழுந்த அவரை சக ஆசிரியர்கள் மீட்டு சிவகங்கை டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

கூடங்குளம் அணு உலை இயங்குகிறதா? மத்திய அரசு அளித்த பதில்!

அங்கு அவருக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இது குறித்து சிவகங்கை போலீசார் தலைமை ஆசிரியை கீதாஞ்சலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பள்ளியில் மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை அடுத்து ஆசிரியை தற்கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் மட்டுமின்றி அரசு பள்ளிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை தேவை..! - வைகோ கோரிக்கை

சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெரும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வந்த மரிய ஐஸ்வர்யா என்ற மாணவியை பள்ளிக்கு தாமதமாக வந்ததன் காரணமாக மாணவர்கள் முன்பு 150 தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் கணினி ஆசிரியர் ஞானபிரகாசம். இதனால் மனமுடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

அடுத்த செய்தி