ஆப்நகரம்

டாஸ்மாக் ஓப்பன்: மருத்துவமனைக்கு செல்லும் கூட்டம் அதிகரிப்பு!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின்னர் மருத்துவமனைக்கும் ஸ்கேன் சென்டர்களுக்கும் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Samayam Tamil 21 May 2020, 3:54 pm
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் மோதல் சம்பவங்கள், சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil tasmac


கொரோனா பொது முடக்கம் காலங்களில் 150 முதல் 160 என மாநிலம் முழுவதும் சராசரியாக பதிவாகிவந்த தாக்குதல் சம்பவங்கள் டாஸ்மாக் மீண்டும் திறந்த முதல் நாள் 1,102ஆக அதிகரித்தது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மூலம் 80 மருத்துவமனைகளில் பெறப்பட்ட புள்ளி விவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் தாக்குதல் சம்பவம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது அதே போல் சாலை விபத்துக்கள் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இது மே 7 மற்றும் 8 அதன் பின் மீண்டும் மே 16ஆம் தேதிகளில் நடந்துள்ளது.

சென்னை மாநகர் நீங்கலாக டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட மே 7ஆம் தேதி 170 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காவல் துறையினர் பல்வேறு சாலை விபத்துக்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குடி போதையில் ரகளை, குடும்ப வன்முறை ஆகிய பிரிவுகளில் ஏராளமான வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

கடமையை செய்யும் பத்திரிகை நிறுவனங்கள்: அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

மே 6 ஆம் தேதி 589 என்ற அளவில் மருத்துவமனைகளில் பதிவாகியிருந்த தாக்குதல் சம்பவங்கள் 2,050ஆக அதிகரித்துள்ளது. “விபத்துக்களுக்கும், வன்முறைக்கும் ஆல்கஹால் எவ்வளவு தூரம் காரணமாக இருக்கின்றன என்பது இதன் மூலம் தெரிய வருகிறது” என நோடல் அதிகாரி மருத்துவர் ஸ்ரீகாந்த் டி.எல். தெரிவித்துள்ளார். தலையில் அடிபட்டு சிகிச்சைக்காக வந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மார்ச் இறுதியிலிருந்து மே முதல் வாரம் வரை மது விற்பனை தடை செய்யப்பட்ட நிலையில் தாக்குதல் தொடர்பாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது. சராசரியாக 1250 என்ற அளவில் இருக்கும் இவை அப்போது 600 என்ற அளவில் சுருங்கியது. பொது முடக்கத்துக்கு பத்து நாள்களுக்கு முன்பாக மார்ச் 13 அன்று 376 தாக்குதல் சம்பவங்களும் 581 சாலை விபத்துக்கள் சம்பவங்களும் நடைபெற்றன. மே 1ஆம் தேதி வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு டாஸ்மாக் கடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்பனை ஜோர்!

சமூக ஆர்வலர்களும் எதிர்க் கட்சியினரும் தொடர்ந்து விமர்சித்து எதிர்த்து வந்தாலும் மே 7ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை உடனடியாக அதிகரித்தது.

சனிக்கிழமை அன்று குடிபோதையில் நான்கு பேர் தங்களது நண்பனை அடித்ததில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இதுபோன்று பல வழக்குகள் டாஸ்மாக் மதுபானம் சம்மந்தமாக பதிவாகியுள்ளது.

உயர் நீதிமன்றம் தடை விதித்த ஒரு வார காலத்தில் மீண்டும் இந்த எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி