ஆப்நகரம்

கோவையில் தலித்துகள் மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை

கோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் நடந்த சாதி வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

TOI Contributor 24 Sep 2016, 2:48 am
கோயம்பத்தூர் மாவட்டம் பெரிய தடாகம் பகுதியில் நடந்த சாதி வன்முறை கலவரத்தால் பாதிக்கப்பட்ட 29 குடும்பங்களிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக பரிந்துரைகள் பற்றிய விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது.
Samayam Tamil attack on dalits in coimbatore national commission for scheduled castes conducts inquiry
கோவையில் தலித்துகள் மீது தாக்குதல்: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் விசாரணை


கடந்த 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தியின் போது கோலாகலமாக விழா கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான தாழ்த்தப்பட்டோர் மீது 17க்கும் மேற்பட்டோர் இந்து சமயத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 6க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பிரிவினர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் காரணமாக துடியலூர் போலீஸ் தாக்குதலில் ஈடுபட்ட 17 இந்து பிரிவினர் மீது வழக்கு பதிவு செய்தது. ஆனால், அவர்களை கைது செய்யவில்லை. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான எஸ்.நாகராஜ் கூறுகையில், கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இது போன்ற பாகுபாடு இருந்து வருகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவினர் முரசு பயின்ற இந்துக்கள் என்று அழைக்கப்பட்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தியை முரசுடன் கோலாகலமாக கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு சிலை அமைத்து அதற்காக முரசு கொட்டி உற்சாகமாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு இல்லாமல், கொலை மிரட்டலும் வந்தது. மேலும், தாக்குதல் சம்பவமும் நடந்தது. இதில் 6க்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட பிரிவினர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட 29 குடும்பத்தை, தேசிய தாழ்த்தப்பட்ட ஆணைய ஆராய்ச்சி அதிகாரி சந்திர பிரபா மற்றும் கமிஷன் விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேசிய லிஸ்டர் அரசு பொருளாதார நலனுக்காக 6 குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் பணம் வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தலித் ஆர்வலரான செல்வகுமார் கூறுகையில், பெரிய தடாகம் பகுதியில் தலித் பிரிவினர் செங்கல் சோழையில் தினக்கூலிக்கு வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடையாது. குறிப்பாக இருப்பதற்கு வீடு கூட இல்லை. இதனை கருத்தில் கொண்டு அரசு அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினால், எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த பரிந்துரையில் பரிந்துரைக்கப்பட்டது.

அடுத்த செய்தி