ஆப்நகரம்

பேரறிவாளன் மீது சிறையில் தாக்குதல்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 13 Sep 2016, 9:11 am
வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil attack on perarivalan in vellore prison
பேரறிவாளன் மீது சிறையில் தாக்குதல்


முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வேலூர் சிறையில், சக கைதி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கியதில் பேரறிவாளன் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவரது கையில் 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், பேரறிவாளன் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி