ஆப்நகரம்

பொன்னார் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூ.,கடும் கண்டனம்

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

TNN 16 Mar 2017, 8:09 pm
சென்னை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil attack on pon radhakrishnan marxist communist condemns
பொன்னார் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கம்யூ.,கடும் கண்டனம்


இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மர்மமான முறையில் இறந்த மாணவர் முத்துகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சேலத்திற்கு சென்ற போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. இச் செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கருத்துக்கள் மீது கடும் தாக்குதலை தொடுப்பதில் தவறில்லை. ஆனால், கருத்து சொல்பவர்கள் மீது தனிப்பட்ட முறையிலோ, நேரடியாகவோ தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல. பொன் ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
Attack on Pon.Radhakrishnan: Marxist communist condemns

அடுத்த செய்தி