ஆப்நகரம்

சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தகி ஆலோசனை

சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட உத்தரவிடலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநருக்கு தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆலோசனை வழங்கியுள்ளார்.

TNN 13 Feb 2017, 7:27 pm
சென்னை: சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட உத்தரவிடலாம் என்று தமிழக பொறுப்பு ஆளுநருக்கு தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆலோசனை வழங்கியுள்ளார்.
Samayam Tamil attorney general mukul rohatgi suggested tamilnadu governor vidyasagar rao call legislative assembly meeting
சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு முகுல் ரோத்தகி ஆலோசனை


அதிமுக ஓ.பி.எஸ். மற்றும் சசிகலா தலைமையில் இரு அணிகளாகப் பிரிந்துள்ளது. இருவரும் ஆளுநரைச் சந்தித்து பேசிய பின்பும் ஆளுநர் அமைதி காப்பதால், இரு அணிகளுக்கும் இடையே முதல்வர் பதவிக்கான போட்டி நீடிக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, சிறப்புச் சட்டப்பேரவையைக் கூட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா இருவருக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும், வி.கே.சசிகலா தொடர்புடைய சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பது நல்லது என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

வி.கே.சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வழங்கிய இந்த ஆலோசனையை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அடுத்த செய்தி