ஆப்நகரம்

போயஸ்கார்டனில் அதிரடி ரெய்டு; காரணம் என்ன? ஆடிட்டர் குரூமூர்த்தி விளக்கம்

போயஸ் கார்டனில் ஐடி ரெய்டு எதற்காக என்று ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் காரணம் கூறியுள்ளார்.

TNN 18 Nov 2017, 7:52 pm
இந்தியாவில் மிகப்பெரிய ஐடி ரெய்டாக தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதில் குறிவைக்கப்பட்டது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா குடும்பம்.
Samayam Tamil auditor gurumurthy expain about poes garden it raid
போயஸ்கார்டனில் அதிரடி ரெய்டு; காரணம் என்ன? ஆடிட்டர் குரூமூர்த்தி விளக்கம்


1800 அதிகாரிகளைக் கொண்டு, 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் பினாமிகளையும் கண்டறிந்து, வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும், பல நூறு கோடி ரூபாய்களும், ஏராளமான தங்க, வைர நகைகளையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு 10 மணிக்கு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இந்நிலையில், போயஸ் கார்டனில் ஐடி ரெய்டு எதற்காக என்று ஆடிட்டர் குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் காரணம் கூறியுள்ளார். அதில்,

ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரி சோதனை. வரி ஏய்ப்பில் ஈடுபட்ட மன்னார்குடி மாபியா மோசடிக்கான மின்னணு வடிவ ஆதாரங்களை அந்த வீட்டில் தான் வைத்திருந்தது. சசிகலாவிடம் சாவி உள்ளதால், ஜெயலலிதாவின் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், வருமான வரித்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வருமான வரித்துறைக்கு பாராட்டுகள்’’ என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

அடுத்த செய்தி