ஆப்நகரம்

சேலத்தில் பலத்த மழை- ராட்சத மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இருந்த ராட்சத மரம் ஒன்று, சாலையின் மீது முறிந்து விழுந்ததில், அவ்வழியே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது.

Samayam Tamil 29 Jul 2019, 8:40 pm
சேலத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ராட்சத மரம் ஒன்று முறிந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்த்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சேலத்தில் பலத்த மழை- ராட்சத மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
சேலத்தில் பலத்த மழை- ராட்சத மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!


சேலத்தில் காலை முதலே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில், பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.

இதில் சேலம் ராமகிருஷ்ணா சாலையில் மாநகராட்சி உயர் அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் இருந்த ராட்சத மரம் ஒன்று, சாலையின் மீது முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உமா மகேஸ்வரி வருகையால் எனது அம்மா செல்லாக்காசாகி விட்டார்: கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!
ஆனால் இந்த விபத்தில் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஸ்ரீதர் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் சிறு காயங்களுடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ராட்சத மரம் முறிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!


மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சாலையின் மீது முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் ராமகிருஷ்ணா பிரதான சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாய் கொலை- முன்னாள் அதிமுக எம்.பி. மகன் 3 மாதம் கழித்து டெல்லியில் கைது!

மேலும் இந்த சம்பவத்தினால் அறுந்து விழுந்த மின் கம்பிகளை பழுது பார்க்கும் பணியில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். சேலத்தில் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி