ஆப்நகரம்

ரூ 3.8 லட்சம் பணப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுநடுக்கு குவியும் பாராட்டு!

பயணி விட்டுச்சென்ற ரூ.3 லட்சம் பணப் பையை ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 4 Jan 2019, 11:23 am
பயணி விட்டுச்சென்ற ரூ.3 லட்சம் பணப் பையை ஆட்டோ ஓட்டுநர் காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம்சென்னையில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil WhatsApp Image 2019-01-04 at 9.04.50 AM.


தூத்துக்குடியைச் சேர்ந்தவர் மொஹமத் ஹசருதீன். இவர்கார் வாங்குவதற்காக சென்னை வந்திருக்கிறார். கார் ஷோரூம் சின்மையா நகரில் இருப்பதால் பார்த்திபன் என்பவரின் ஆட்டோவில் அவர்பயணித்துள்ளார். சின்மையா நகரில் இறங்கிய அவர்தனது பையை ஆட்டோவில் இருந்து எடுக்க மறந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்பார்த்திபன் அங்கிருந்து கிளம்பிச்சென்ற பிறகு ஆட்டோவில் பை இருப்பதை பார்த்துள்ளார்.மேலும் பையை திறந்து பார்த்தபோதுரூ. 3.8 லட்சம் பணம் இருந்துள்ளது. பையை தவறவிட்டமொஹமத் ஹசருதீனை தேடிச்சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கில்லை. எனவே கோயம்பேடு காவல்நிலையத்தில் அந்த பையை ஒப்படைத்துள்ளார் பார்த்திபன்.

இதேநேரத்தில் மொஹமத்ஹசருதீன் பையை காணவில்லை என்றுகாவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் பார்த்திபன் கொடுத்த பையை காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

ஆட்டோ ஓடுநர் பார்த்திபனின் நேர்மையை பாராட்டி சிட்டி போலீஸ் கமிஷ்னர் ஏ.கே.விஷ்வநாதன் அவருக்கு சன்மானம் வழங்கினார்.

அடுத்த செய்தி