ஆப்நகரம்

மாநகராட்சியாகும் மூன்று நகராட்சிகள்: தமிழக அரசின் புதிய திட்டம்

ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 26 Mar 2017, 8:22 pm
சென்னை: ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil avadi thambaram and pallavaram to be named corporations
மாநகராட்சியாகும் மூன்று நகராட்சிகள்: தமிழக அரசின் புதிய திட்டம்


தமிழகத்தில் மொத்தம் 12 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் ஆவடி, தாம்பரம், பல்லாவரம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மாவட்ட நிர்வாகம் இதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்த பரிந்துரை அரசின் பரிசீலனையில் உள்ளதால், விரைவில் இந்த மூன்று நகராட்சிகளும் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு மாநகராட்சிகளாக அறிவிக்கப்படும் போது, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கும்.

இத்துடன், பேரூராட்சியாக இருக்கும் குன்றத்தூர், மாங்காடு ஆகியவை கிளை நகராட்சிளாக மேம்படுத்தப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி