ஆப்நகரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை!

மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள காளைகளுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

TOI Contributor 5 Feb 2017, 8:30 am
மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ள காளைகளுக்கு, மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
Samayam Tamil avaniapuram jallikattu medical test done for bulls
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை!


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று (பிப்.,5) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியுள்ளது. இதில், ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதையொட்டி, விழா ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க வேண்டுமெனில் காளைகளுக்கு கட்டாய முன்பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், போட்டியில் பங்கேற்கும் காளை மாடுகளுக்கு, மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டது. இதற்கான பணியில் 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

காளைகளின் கொம்பு கூர்மையாக இருக்கிறதா; திமிலில் எண்ணெய் ஏதும் தடவியிருக்கிறதா; அதிகமாகக் கலர் பொடி பூசியிருக்கிறதா; காளைகள் சாய்ந்து நடக்கிறதா; காயங்கள் அதிகம் இருக்கிறதா; காளைகளுக்குக் கழித்தல், காய்ச்சல் ஏதும் இருக்கிறதா என்பது மாதிரியான பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

Avaniapuram Jallikattu: Medical test done for bulls

அடுத்த செய்தி