ஆப்நகரம்

எம்.எல்.ஏ தேவையில்லை ஜல்லிக்கட்டு தான் வேண்டும் என தேர்தல் புறக்கணிப்பு

மதுரை அவனியாபுரம் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

TNN 19 Nov 2016, 10:50 am
மதுரை : மதுரை அவனியாபுரம் பகுதி மக்கள் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil avaniapuram residents boycott the byelection
எம்.எல்.ஏ தேவையில்லை ஜல்லிக்கட்டு தான் வேண்டும் என தேர்தல் புறக்கணிப்பு


தமிழகத்தில் ஜல்லிகட்டு பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வந்தது. இருப்பினும் மதுரையில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது. காளைகளை காட்சிபடுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் ஜல்லி கட்டு நிறுத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், காளைகள் மீதான தடையை நீக்க வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தொகுதியின் இடைத்தேர்தல் நடைபெற்று வருகின்றது. இந்த தொகுதிக்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்குசாவடிக்கு முன் கூடிய 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பூத் சிலிப்புகளை கிழித்து எரிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி