ஆப்நகரம்

அவனியாபுரம் : ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்று

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் துவங்கியுள்ளனர்

TNN 2 Feb 2017, 10:15 pm
மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் பணிகள் துவங்கியுள்ளனர்
Samayam Tamil avaniya puram jallikattu bull gets medical check up
அவனியாபுரம் : ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்று


மாணவர்களின் பெரும் புரட்சிக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கான நடைப்பெறுவதற்கான பணிகள் துவங்கியுள்ளது .

மதுரையில் மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க உத்தேசித்துள்ள அவனியாபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த காளை வளர்ப்போர் தங்கள் காளைகளை அவனியாபுரம் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

மேலும் இந்த கால்நடை மருத்துவமனையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதிவரை கால்நடைத்துறை முன்ப‌திவு கூப்பன் வழங்கப்படுகிறது. இந்த பணியின் போது காளையின் உடல் தகுதி , நோய் போன்ற தன்மைகள் போன்றவை சோதிக்கப்பட்டு மருத்துவர்களின் சான்றுக்கு பிறகே இந்த காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுக்கும்.

அடுத்த செய்தி