ஆப்நகரம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முதல்வர் ஓ.பி.எஸ் , சசிகலாவுக்கு அழைப்பு

வரும் பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

TNN 30 Jan 2017, 4:25 pm
சென்னை : வரும் பிப்ரவரி 5-ம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண வருமாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
Samayam Tamil avaniyapuram jallikattu commitee invites tn cm ops sasikala
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : முதல்வர் ஓ.பி.எஸ் , சசிகலாவுக்கு அழைப்பு


இதுகுறித்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் செய்தியாளர்களிடம் கூறும்போது, " மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும். ஜல்லிக்கட்டு நடக்க நடவடிக்கை எடுத்த முதல்வர்ருக்கும் , அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு நன்றி.
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. ஜல்லிகட்டு விழாவில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு அழைப்பு விடுத்துள்ளோம்." என்று அவர்கள் கூறினார்கள்

முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் , அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை அவரது இல்லத்திலும், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தலைமைச் செயலகத்திலும் சந்தித்தனர்.

அடுத்த செய்தி