ஆப்நகரம்

பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரம் காட்டும் ஆவின்

பிளாஸ்டிக் பால் கவர்களை டெலிவரி பாய் மூலம் வீடுவீடாகச் சென்று வாங்கி வந்து மறு சுழற்சிக்கு அனுப்பப்படும் என ஆவின் பால் தயாரிப்பு நிறுவனம் தகவல்.

Samayam Tamil 19 Jan 2019, 8:07 pm
தமிழ்நாடு கூட்டுறவு பால் தயாரிப்பாளர்களின் நிறுவனம் ஆவின். தற்போதைய பிளாஸ்டிக் தடை உத்தரவை அடுத்து தமிழகத்தில் பிளாஸ்டிக் கட்டாயத் தடை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் கவரில் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த கவர்கள் தூக்கி வீசப்படுகின்றனர். கழிவுநீரில் கலந்து சாக்கடையை அடைத்து இந்த பிளாஸ்டிக் கவர் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Samayam Tamil avin


இதனைத் தடுக்கும் விதமாக தற்போது ஆவின் நிறுவனம் ஒரு முக்கிய திட்டத்தை அமல் படுத்தியுள்ளது என அதன் நிர்வாகத் தலைவர் காமராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி பயன்படித்தப்பட்ட ஆவின் பிளாஸ்டிக் பால் கவர்களை டெலிவரி பாய் மூலம் வீடுவீடாகச் சென்று வாங்கி வந்து மறு சுழற்சிக்கு அனுப்பப்படும்.

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் டம்ளர்கள், செராமிக் கப்களில் அவின் பாலகங்களில் பால் வழங்கப்படுகிறது.

ஒரு நாளில் 40 லட்சம் பிளாஸ்டிக் பாக்கெட்களை ஆவின் பயன்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 23 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்களில் அடைக்கப்படுகிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தாலும் பால் மற்றும் எண்ணெய் தொழில்களுக்கு விதிவிலக்கு அளித்திருந்தது.

ஆனாலும் ஆவின் நிறுவனம், தங்கள் தயாரிப்புகளில் பிளாஸ்டிக் தடைக்கு தீவிரம் காட்டி வருகின்றன. இனி ஆவின் இனிப்புகள் பேப்பர் பேக்குகளில் அடைத்து தரப்படும். கார்ட்போர்ட் பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி