ஆப்நகரம்

பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1200 கி.மீ. சைக்கிள் பயணம்!

பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை ஹைதராபாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 15 Feb 2020, 3:01 pm
தற்போதைய சூழலில் நேரத்தை கழிக்க பலவிதமான பொழுதுபோக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளது. பலர் அதில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்பட்டு அதிலிருந்து விடுபட வழிதேடி உடற்பயிற்சி, சைக்கிளிங், நீண்ட தூர இருசக்கர பயணம் என்பதை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.
Samayam Tamil பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1200 கி.மீ. சைக்கிள் பயணம்



பலர் பொழுதுபோக்காக இதை செய்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள 16 கொண்ட ட்ரேடர்ஸ் என்ற சைக்கிள் குழுவினர் மாணவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற சைக்கிள் பயணத்தை செய்து வருகின்றனர்.

பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கை தரத்தை கல்வி கொடுத்து உயர்த்த கடந்த 10 ஆண்டுகளாக குளோபல் எய்டு என்ற அமைப்பு விசாகப்பட்டினத்தில் உள்ளது. இதன் மூலமாக பழங்குடியின மாணவர்களுக்கு தேவையான தங்குமிடம், கல்வி, புத்தகம் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்காக சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு இணையம் வழியாக 10 ஆண்டுகளாக நிதியை திரட்டி வருகின்றனர். இப்படியாக அமராவதி, விசாகாப்பட்டினம், மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சைக்கிள் மூலமாக சென்று நிதியை இணையம் வழியாக திரட்டி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

சிஏஏ எதிர்ப்பு: நெல்லையில் தேசியக் கொடியுடன் பிரம்மாண்ட போராட்டம்!

2020 ஆம் ஆண்டில் இந்தியா வல்லரசாகும் என்று கூறிய அப்துல் கலாமை நினைவு கூறும் வகையில் சைக்கிள் பயணத்தை கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி ஹைதராபாத்தில் துவங்கி எல் பி நகர், நர்கட் பல்லி, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மேலூர், காளையார் கோயில் வழியாக 1200 கிலோமீட்டர் கடந்து இன்று இராமேஸ்வரம் பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்தில் முடித்தனர். இவர்களை அப்துல் கலாமின் பேரன் சலீம் வரவேற்றார். பிறகு அவரது சமாதிக்குச் சென்ற சைக்கிள் குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

ட்விட்டரைக் கலக்கும் ‘வீதிக்கு வாங்க ரஜினி’!

இதுகுறித்து குழுவை சேர்ந்த துர்கா பிரசாத், “நாங்கள் சைக்கிளிங் செய்வதை பொழுதுபோக்காக கொண்டிருந்தோம். இதன் மூலம் சமுதாய மாற்றத்தை உருவாக்க எண்ணி இதை செய்து வருகிறோம். சைக்கிளில் செல்வதன் மூலம் நாங்கள் உடல் வலிமை அடைவதோடு எங்கள் பயணம் மூலமாக மாணவர்களின் வாழ்க்கை மாறுவதை நாங்கள் உணர்கிறோம். இதன் மூலம் தற்பொழுது வரை 10 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை இணையம் மூலம் திரட்டி உள்ளோம். இன்னும் மூன்று நாட்கள் மீதும் உள்ள நிலையில் 11 லட்சம் வரை தொகை கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த பணம் மூலம் பழங்குடியின மாணவர்களின் வாழ்க்கையை உயர்த்த பயன்படுத்துவோம்” என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி