ஆப்நகரம்

அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் 17 பேருக்கும் காவல் நீட்டிப்பு

அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 31 Jul 2018, 11:54 am
அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து சென்னை மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Child Abuse 1


அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத் திறன் கொண்ட 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அந்த குடியிருப்பில் பணியில் ஈடுபட்டிருந்த லிப்ட் ஆபரேட்டா்கள், காவலாளி உள்ளிட்ட 17 போ் கைது செய்யப்பட்டனா். 17 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடா்ந்து அவா்கள் அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனா். குற்றம் சாட்டப்பட்டவா்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு குற்றவாளியை சிறுமி உறுதி செய்தாா். இந்நிலையில் 17 பேரும் இன்று மகளிா் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜா் படுத்தப்பட்டனா்.

பின்னா் 17 பேரின் நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி