ஆப்நகரம்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து போகும் செங்கல்...

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட, ராமேஸ்வரம் கோயிலிருந்து, பூஜை செய்து ரயில்கள் மூலம் செங்கற்கள் அனுப்பி வைக்கப்பட்டது...

Samayam Tamil 11 Nov 2019, 4:28 pm
பாபர் மசூதி இடிக்கப்பட்டத்துத் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வெளியானது. அதன்படி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டிக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியானது முதல் சமூக வலைதளங்கள் உள்பட வெளிப்படையாக யாரும் கருத்துக் கூறக் கூடாது என அரசு உத்தரவிட்டதால், வெளிப்படையாக யாராலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை.
Samayam Tamil Tamil_News_large_1735178


எனினும், இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கல் வைத்து அதற்கு ராம நாம ஜப வேள்வி பூஜை செய்து அதில் ஸ்ரீராம் என எழுதி அதை அயோத்திக்கு அனுப்பி முடிவு செய்தனர்.

சிவசேனா - பாஜக கூட்டணி முறிந்தது!

இந்நிலையில், இந்த வழியில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில், வைத்து இந்து மதத்தைச் சேர்ந்த சிலர் செங்கல்லைப் பூஜை செய்தனர். பூஜை செய்த செங்கற்களை ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து அயோத்திக்கு நேற்று புறப்பட்ட சாரதா விரைவு ரயிலில் சம்பந்தப்பட்டவர்கள் எடுத்து சென்றனர்.

தேர்தல் சீர்திருத்தங்களின் நாயகன் டி.என்.சேஷன்; அப்படி என்ன சாதித்தார் இவர்?

அதன்படி, செங்கற்கள் வரும் 13 ஆம் தேதி (புதன்கிழமை) அயோத்தியில் உள்ள கரசேவபுறதில் ராமர் கோவில் நிர்வாகி நித்திய கோபால்தான் ஸ்வாமிகளிடம் ஒப்படைத்து ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. இதேபோல், சென்னையிலிருந்தும் சுமார் நூற்றுக்கணக்கான பக்தர்கள் செங்கற்களைப் பூஜை செய்து அதை அயோத்திக்குக் கொண்டு செல்ல உள்ளனர்.

அடுத்த செய்தி