ஆப்நகரம்

நதிநீர் இணைப்புக்கு 1 கோடி வழங்க தயார்: அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி

நடிகர் ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு - தென்னிந்திய தலைவரானார் அய்யாக்கண்ணு சந்தித்துப் பேசினார்.

TNN 18 Jun 2017, 7:10 pm
சென்னை : நடிகர் ரஜினியை அவரது போயஸ்கார்டன் இல்லத்தில், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு - தென்னிந்திய தலைவரானார் அய்யாக்கண்ணு சந்தித்துப் பேசினார்.
Samayam Tamil ayyakannu meets rajinikanth
நதிநீர் இணைப்புக்கு 1 கோடி வழங்க தயார்: அய்யாக்கண்ணுவிடம் ரஜினி உறுதி


அவரை சந்தித்துப் பேசிய பின் அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.

அய்யாக்கண்ணு கூறியதாவது:
நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். நதிநீர் இணைப்புக்காக அறிவித்தபடி ரூ. 1 கோடியை தர தயாராக உள்ளதாக ரஜினிகாந்த் கூறினார்.

அந்த ரூ.1 கோடி நிதியை பிரதமரிடம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். தமிழக விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க காவிரி நதி நீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்க வேண்டுமெனில் மகாநதி அணையை காவிரியுடன் இணைக்க வேண்டும் என தெரிவித்தோம்.

Rajinikanth offers 1cr as aid to distressed farmers. #Watch as farmers thank thalaivar. #RajniPoliticalSeeds pic.twitter.com/kBT3KR3Uve — TIMES NOW (@TimesNow) June 18, 2017

விவசாயிகளுக்காக எம்.எஸ் சுவாமிநாதனின் அறிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். பயிர்களுக்கு நியாயமான விலை, பயிர்கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என ரஜினியிடம் தெரிவித்தோம்.

எங்களுடைய கோரிக்கையை கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த், விவசாயிகள் தங்களை வருத்திக் கொள்ளாமல் போராட்டத்தை அமைதியாக நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி