ஆப்நகரம்

விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கிறது தமிழக அரசு: ஐய்யாக்கண்ணு

தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை என்று தமிழக அரசு கூறியதற்கு நதிநீர் இணைப்புச் சங்கத்தின் தலைவர் ஐய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

TNN 28 Apr 2017, 5:44 pm
தமிழகத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை என்று தமிழக அரசு கூறியதற்கு நதிநீர் இணைப்புச் சங்கத்தின் தலைவர் ஐய்யாக்கண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ayyakkannu condemns tn government for the statement on farmers suicide case
விவசாயிகளை ஏமாற்றப் பார்க்கிறது தமிழக அரசு: ஐய்யாக்கண்ணு


விவசாயிகள் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் ஒன்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவது மட்டும் தீர்வாகாது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொண்டு இறக்கவில்லை என்றும் கடந்த ஓராண்டில் இறந்த 82 விவசாயிகளுக்கு அவர்களுடைய பொருளாதார நிலை கருதி ரூ.2.46 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள நதிநீர் இணைப்புச் சங்கத்தின் தலைவர் ஐய்யாக்கண்ணு, “கடனைத் திரும்பச் செலுத்த கேட்டு விவசாயிகளின் வீட்டுக்கு வரும் வங்கி அதிகாரிகள் தரக்குறைவாக நடத்துகொள்கின்றனர். கடனை திருப்பிக் கட்டுவதற்கு முடியாவிட்டால் வீடு, நிலங்களை விற்றுவிடுமாறு வற்புறுத்துகின்றனர். அதனால், மனமுடைந்துபோய் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று கூறி ஏமாற்றப் பார்க்கிறது. தமிழக அரசு விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க தவறிவிட்டது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் மட்டுமே தற்கொலையை தடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி