ஆப்நகரம்

சபரிமலை: நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து சென்னையில் பேரணி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து சென்னையில் பக்தா்கள் பேரணி சென்றனா்.

Samayam Tamil 7 Oct 2018, 8:08 pm
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற தீா்ப்புக்கு எதிராக சென்னையில் ஐயப்ப பக்தா்கள் பேரணி சென்றனா்.
Samayam Tamil Save Sabarimala


கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற வழக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆணும், பெண்ணும் சமம் என்று தீா்ப்பு வழங்கினா்.

இந்த தீா்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தொிவித்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பா் 16ம் தேதி முதல் பெண்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் சபரிமலையில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு தொிவித்து சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் ஐயப்பன் பக்தா்கள் பேரணி மேற்கொண்டனா். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தொடங்கி மகாலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் வரை பக்தா்கள் பேரணியாக சென்றனா்.

அடுத்த செய்தி