ஆப்நகரம்

கர்ப்பமான பூனை... வளைகாப்பு, நலங்கு வைத்து அழகு பார்த்த எஜமானி!!

தனது வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்துவரும் பூனைக்கு அதன் எஜமானி வளைகாப்பு செய்து அழகு பார்த்துள்ள ருசிகரமான சம்பவம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 16 Sep 2020, 10:02 pm
நாய், பூனை போன்ற வீட்டு பிராணிகளுக்கும், அவற்றை செல்லமாக வளர்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான பாச பிணைப்பு அலாதியானது. காலையில் வாக்கிங் செல்வதில் தொடங்கி, இரவு தூங்கப் போகும்வரை இந்த வாயில்லா ஜீவன்கள் தங்களது எஜமானகளையே சுற்றிச் சுற்றி வருவது வாடிக்கை.
Samayam Tamil pondy cat


இதற்கு பிரதிபலனாக, தங்களின் செல்லப்பிராணிகளை தங்களது பிள்ளைக்கு இணையாக கவனித்து கொள்ளும் எஜமானர்களும் இருக்கின்றனர். ஆனால், இவர்களையெல்லாம் விஞ்சும் விதத்தில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டில் ஆசையாய் வளர்த்துவரும் பூனைக்கு வளைகாப்பு செய்து அசத்தியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் வசந்தா. இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து, தான் ஆசையாக வளர்த்துவரும் பூனைக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.

மோடியால் சூடு பிடித்த தமிழ்நாட்டு நாய் பிசினஸ்!

நிறைமாத கர்ப்பணியாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு சடங்கு செய்வதை போல, அந்த பூனைக்கு பூமாலை அணிவித்து, நலங்கு வைத்து வளைகாப்பு விழாவை நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் வசந்தா. அவரது பிள்ளைகளும் பூனைக்கு நலங்கு வைத்து மகிழ்ந்துள்ளனர்.

வளைகாப்பில் வைக்கப்படும் சீர்வரிசை தட்டுகளை போன்று, பூனைக்கு நடத்தப்பட்ட வளைகாப்பிலும் ஏழு வகையான சீர்வரிசைகள் வைக்கப்பட்டதுதான் இந்த விழாவின் ஹைலைட்.

கைலாசா பெண்களுக்கு ஆசைப்படும் 90-ஸ் கிட்ஸ், கடிதத்தை பார்ப்பாரா நித்யானந்தா?

ருசிகரமான இந்த விழா அண்மையில் நடைபெற்ற நிலையில், மறுநாளே அந்த பூனை அழகான நான்கு குட்டிகளை ஈன்றுள்ளதால், அதன் எஜமானி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அடுத்த செய்தி