ஆப்நகரம்

ஜெயலலிதா-சசிகலா நட்பு உருவான பிண்ணனி

சசிகலா நடராஜன் மறைந்த தமிழக முதல்வரின் மிக நெருங்கிய தோழி. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது ஜெ.,வின் அறைக்குள் மருத்துவர்களை தவிர சசிகலா மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.

TNN 6 Dec 2016, 4:25 pm
சசிகலா நடராஜன் மறைந்த தமிழக முதல்வரின் மிக நெருங்கிய தோழி. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது ஜெ.,வின் அறைக்குள் மருத்துவர்களை தவிர சசிகலா மட்டுமே அனுமதிக்கப்பட்டார்.
Samayam Tamil background of jayalalithaa sasikala friendship
ஜெயலலிதா-சசிகலா நட்பு உருவான பிண்ணனி


அரசு அதிகாரிகள், அதிமுகவின் அமைச்சார்கள் என யாருமே மருத்துவமனையில் உள்ள ஜெ.,யின் அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஆட்சியிலும், அதிகாரத்தில் இல்லாத சசிகலாவுக்கு மட்டுமே அந்த அறைக்குள் அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் சசிகலா ஜெ.,வின் நிழலாகவே செயல்ப்பட்டார்.

1984-ம் ஆண்டு தான் ஜெயலலிதாவுக்கு சசிகலா அறிமுகமானார். அப்போது எம்.ஜி.ஆர் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அந்த தருணத்தில் அதிமுக சார்பில் கடலூரில் ஒரு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

அந்த பொதுக்கூட்டத்தின் போது தான அதிமுக நிறுவனரும் , அப்போதைய முதல்வருமான எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவை அதிமுக-விகொள்கைப் பரப்பு செயலாளராக அறிவித்து அவருக்கு செங்கோல் ஒன்றையும் வழங்கினார்.

ஜெயலலிதா அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்-க்கு மிகவும் நெருக்கமானவராக கருத்தப்பட்டதால் ஜெ.,வை கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகா நன்கு உபசரித்ததோடு, மாவட்ட தொடர்பு அதிகாரியாக இருந்த நாடராஜனின் மனைவியான சசிகலாவை ஜெ.,வுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கடலூரில் உள்ள தற்போதைய முகாம் அலுவலகத்தில் ஜெ., -சசி., சந்திப்பு முதன்முதலாக நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஜெ.,வுக்கு சசி மிகவும் நெருக்கமானார்.இதன் பிற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜெ.,வுக்கு சசி உதவியாக இருந்ததால் இருவரும் நிழலை விட்டு பிரிய முடியாத பிம்பம் போல் இருந்தார். தற்போது சசிகலாவுக்கு ஜெ., மரணம் சொல்லண்ணா துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

summary : background of #Jayalalithaa- Sasikala first meet

அடுத்த செய்தி