ஆப்நகரம்

தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா உறுதி..!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 May 2021, 6:59 pm
தமிழக சட்டமன்ற தேர்தலில் குன்னம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.எஸ். சிவசங்கர் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து திமுக அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்


இந்த நிலையில், இன்று கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்திலும் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. லேசான காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் இருந்ததால் எஸ்.எஸ். சிவசங்கர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டார்.

அதில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இந்நிலையில், அவரை ஒரு வாரத்திற்கு, வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மே 24க்கு பிறகு ஊரடங்கா? முதல்வரின் முடிவு இதுதான்..!

இதுதொடர்பாக அமைச்சர் தமது முகநூலில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஒரு வாரத்திற்கு, வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். நலமாக உள்ளேன். அருள்கூர்ந்த அலைபேசியில் அழைக்க வேண்டாம்'' என இஇவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி