ஆப்நகரம்

நெல்லையில் மழை : குற்றால அருவிகளில் குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அங்குள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TNN 29 Jan 2017, 9:56 pm
நெல்லை: குற்றாலம் அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அங்குள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil ban to take bath in courtallam falls nellai
நெல்லையில் மழை : குற்றால அருவிகளில் குளிக்க தடை


நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது .நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

குற்றாலத்திலுள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிப்பதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி