கோவையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாடிவயல், அதன் அருகே அறுவடைக்குத் தயாரான சுமார் 3 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இந்த காட்சி பார்ப்பவர்களைக் கண் கலங்கச் செய்கிறது. இதேபோல் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவையில் தொடர்ந்து மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பாப்பாசாமி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த வாழைகள் சாய்ந்தன. சுமார் 3 ஏக்கர் வாழைகள் சரிந்து விழுந்து நாசமடைந்தன.
தமிழ்நாட்டை வெளுக்க போகும் மழை, நீலகிரியில் அதிகனமழை உறுதி!
தொடர் மழை காரணமாகச் செய்வதறியாது விவசாயிகள் திணறி வருகின்றனர். மழை நிற்காமல் பெய்து வருவதால், சாய்ந்து நிற்கும் வாழை மரங்கள் மழையில் நனைந்த வண்ணமுள்ளது.
வாழைகள் அனைத்தும் சாய்ந்ததால் விவசாயி செய்த முதலீடு அனைத்தும் வீணாகிப் போனது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேதம் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்போதைய நிலையிலிருந்து மீண்டு வரும் வகையில் நிவாரணம் அளிக்க வேண்டும் என அரசுக்கு பாப்பாசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கும், பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கோவையில் தொடர்ந்து மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே காலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பாப்பாசாமி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த வாழைகள் சாய்ந்தன. சுமார் 3 ஏக்கர் வாழைகள் சரிந்து விழுந்து நாசமடைந்தன.
தமிழ்நாட்டை வெளுக்க போகும் மழை, நீலகிரியில் அதிகனமழை உறுதி!
தொடர் மழை காரணமாகச் செய்வதறியாது விவசாயிகள் திணறி வருகின்றனர். மழை நிற்காமல் பெய்து வருவதால், சாய்ந்து நிற்கும் வாழை மரங்கள் மழையில் நனைந்த வண்ணமுள்ளது.
வாழைகள் அனைத்தும் சாய்ந்ததால் விவசாயி செய்த முதலீடு அனைத்தும் வீணாகிப் போனது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேதம் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்போதைய நிலையிலிருந்து மீண்டு வரும் வகையில் நிவாரணம் அளிக்க வேண்டும் என அரசுக்கு பாப்பாசாமி கோரிக்கை வைத்துள்ளார்.