ஆப்நகரம்

சசிகலாவை சந்திக்க அதிமுக பெண் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு..!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை பார்க்கச் சென்ற கோகுல இந்திரா,வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

TNN 21 Feb 2017, 5:55 pm
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை பார்க்கச் சென்ற கோகுல இந்திரா,வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil bangalore prison authorities denied permission for aiadmk leaders to meet sasikala
சசிகலாவை சந்திக்க அதிமுக பெண் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு..!


சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரூவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் யாராவது ஒரு அதிமுக பிரமுகர்,சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.நேற்று அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் ஆகியோர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான கோகுல இந்திரா ,வளர்மதி,அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று மாலை பெங்களூரு சென்றனர்.ஆனால் சசிகலாவை சந்திக்க மூவருக்கும் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து மூவரும் நாளை காலை சசிகலாவை சந்திக்க பெங்களூரு சிறைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Bangalore Prison authorities denied permission for AIADMK leaders to meet sasikala

அடுத்த செய்தி