சென்னை: வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வங்கி மேலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு, சாஸ்திரிநகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையில் காசாளராக பணிபுரிபவர் இளங்கோவன். இவர், ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நங்கநல்லூருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, மீனம்பாக்கம் அருகே அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் அப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக தெரிகிறது.
இச் சம்பவம் குறித்து சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் நேற்றைய தினம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியில் இருந்து ரூ.25 லட்சத்தை கையாடல் செய்து, அதாவது, மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கையாடல் செய்து, அதனை புரோக்கர் ஒருவரின் உதவியுடன் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் மோசடி வேலையில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதாகவும், இதனை பயன்படுத்திக் கொண்ட புரோக்கர், தனது நண்பர்கள் உதவியுடன் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து, சாஸ்திரிநகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையின் மேலாளர் லோகேஷ்வர ராவ், காசாளர் இளங்கோவன் உள்ளிட்ட 5 பேரை, வங்கிப் பணம் கையாடல் தொடர்பாக, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Bank money theft: 5 arrest including Manager
சென்னை அடையாறு, சாஸ்திரிநகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையில் காசாளராக பணிபுரிபவர் இளங்கோவன். இவர், ரூ.25 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நங்கநல்லூருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது, மீனம்பாக்கம் அருகே அவரது காரை வழிமறித்த மர்ம நபர்கள் அப்பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக தெரிகிறது.
இச் சம்பவம் குறித்து சென்னை பல்லாவரம் காவல்நிலையத்தில் நேற்றைய தினம் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இது தொடர்பான விசாரணையில் போலீசார் இறங்கினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வங்கியில் இருந்து ரூ.25 லட்சத்தை கையாடல் செய்து, அதாவது, மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கையாடல் செய்து, அதனை புரோக்கர் ஒருவரின் உதவியுடன் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றும் மோசடி வேலையில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டதாகவும், இதனை பயன்படுத்திக் கொண்ட புரோக்கர், தனது நண்பர்கள் உதவியுடன் அந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து, சாஸ்திரிநகர் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளையின் மேலாளர் லோகேஷ்வர ராவ், காசாளர் இளங்கோவன் உள்ளிட்ட 5 பேரை, வங்கிப் பணம் கையாடல் தொடர்பாக, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற புரோக்கர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Bank money theft: 5 arrest including Manager