ஆப்நகரம்

தமிழக அஞ்சல் துறையில் விரைவில் வங்கி சேவை!

தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் தனியார் வங்கி போல் சேவை ஒன்று துவங்கப்படவுள்ளதாக தமிழக தலைமை அஞ்சல் வட்டத்தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Mar 2018, 4:46 pm
தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் தனியார் வங்கி போல் சேவை ஒன்று துவங்கப்படவுள்ளதாக தமிழக தலைமை அஞ்சல் வட்டத்தலைவர் சம்பத் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil banking service will be available in tamilnadu post office
தமிழக அஞ்சல் துறையில் விரைவில் வங்கி சேவை!


சித்தலம்பாக்கத்தில் 600131 என்ற புதிய பின்கோடுடன் நேற்று துணை அஞ்சலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்த்தன் புதிய துணை அஞ்சலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் தமிழ்நாடு தலைமை அஞ்சல் வட்டத் தலைவர் சம்பத் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் 8,500 பேருக்கு ஒரு அஞ்சலகம் உள்ளது என்றும் தமிழகத்தில் 6,000 பேருக்கு ஒரு அஞ்சலகம் வீதம் 12,135 அஞ்சலகங்கள் உள்ளதென்றும் தெரிவித்தார்.

மேலும், அஞ்சல் துறையில் வங்கி சேவை போன்று மாநிலம் முழுவதும் 37 இடங்களில் புதிதாக ஒரு சேவை துவங்கபட உள்ளதாகவும், இதில் கடன் வசதி தவிர மற்ற அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் கூறினார்.

அடுத்த செய்தி