ஆப்நகரம்

பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் : கமல் அறைகூவல்

சென்னையில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் பேனர் கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 15 Sep 2019, 10:11 pm
சென்னை பள்ளிக்கரணை அருகே, அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், கு்ரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Samayam Tamil bck.


கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இத்துயர சம்பவத்தில், தங்களது ஒரே மகளை இழந்து தவிக்கும் சுபஸ்ரீயின் பெற்றோரை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அவர், "சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான குற்றவாளி வெகுநாட்களுக்கு ஓடி ஒளிய முடியாது. தமிழகத்தில் பேனர் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மக்களே அதனை முடிவுக்கு கொண்டு வந்து விடுவர். பேனர் கலாசாரத்தை ஒழிக்க பொதுமக்களுக்கு மக்கள் நீதி மய்யம் பக்கபலமாக இருக்கும்" என்று கமல்ஹாசன் உறுதியளித்தார்.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இத்துயர சம்பவத்தையடுத்து திமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், இனி கட்சி விழாக்களில் விளம்பர பேனர்கள் லைக்க வேண்டாம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அஜித்தின் படவிழாக்களின் போது இனி பொது இடங்களில் பேனர்கள், கட் -அவுட்களை வைக்கமாட்டோம் என்று அவரது ரசிகர்கள் அதிரடியாக முடிவெடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து, பிகில் திரைப்பட ஆடியோ வெளியிட்டு விழாவையொட்டி, தமக்கு பேனர்கள், கட் -அவுட்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜயும் அதிரடியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி