ஆப்நகரம்

ஆட்சியர் அலுவகல சுவரில் முதல்வரை துரோகி என விமர்சித்து பேனர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக காம்பவுண்டு சுவரில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் சபாநாயகரை துரோகிகள் என விமர்சித்து வைத்த பேனரால் அதிகாலையில் பரபரப்பு நிலவியது.

Samayam Tamil 12 Apr 2019, 11:39 am
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாக காம்பவுண்டு சுவரில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் சபாநாயகரை துரோகிகள் என விமர்சித்து வைத்த பேனரால் அதிகாலையில் பரபரப்பு நிலவியது.
Samayam Tamil ஆட்சியர் அலுவகல சுவரில் முதல்வரை துரோகி என விமர்சித்து பேனர்
ஆட்சியர் அலுவகல சுவரில் முதல்வரை துரோகி என விமர்சித்து பேனர்


தமிழகத்தில் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்காக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு கட்சியினரும் முற்றுகையிட்டு வீதி வீதியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக காம்பவுண்டு சுவரில், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் சபாநாயகரை துரோகிகள் என விமர்சித்து பேனர் வைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் பேனா மூலம் அதிமுக அரசை குற்றம்சாட்டி பல்வேறு விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது.

பேனர் வைக்கப்பட்டிருந்த பகுதி பேருந்து நிறுத்தம் என்பதால் அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேனர்களை அப்புறப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கும் இடத்தில் தமிழக முதல்வரை விமர்சித்து பேனர் வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி