ஆப்நகரம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - அடிதடிக்கு மட்டும் போலாமா பார் நாகராஜ்!

பொள்ளாச்சி விவகாரத்தில் தான் தவறாக உள்ளே கொண்டு வரப்பட்டுள்ளதாக பார் நாகராஜ் வீடியோ மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 14 Mar 2019, 3:15 pm
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடூர சம்பவங்கள் வெளியானதை அடுத்து, கைது, போராட்டம், பாதுகாப்பு அதிகரிப்பு என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil bar nagaraj released a video about his innocence in pollachi sex case
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் - அடிதடிக்கு மட்டும் போலாமா பார் நாகராஜ்!


இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவற்றை பறிமுதல் செய்த போலீசார், தடவியல் துறையிடம் ஆய்விற்காக ஒப்படைத்துள்ளனர். குற்றவாளிகள் மீது மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் புகார் அளித்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், செந்தில்(33), பாபு(26), ஆச்சிபட்டி வசந்தகுமார்(26), ஜோதி நகர் பார் நாகராஜ்(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பார் நாகராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது புகைப்படமும் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் அது நான் அல்ல. கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவரான சதீஷ் தான்.

இது பொள்ளாச்சி மக்களுக்கும் நன்றாகவே தெரியும். எனது உடலில் சில அங்க அடையாளங்கள் இருக்கின்றன. அதை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். என் மீது எந்தவித தவறும் கிடையாது. ஊடகங்களால் நானும், எனது குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.

பாதிக்கப்பட்ட மாணவியின் அண்ணனுக்கு மிரட்டல் விடுத்ததாக கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளேன். நான் அடிதடி வழக்கில் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறேன். அதுதொடர்பான வழக்கில் எப்போது வேண்டுமானாலும் ஆஜராக தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி