ஆப்நகரம்

எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீா்கள் – பாரதிராஜா காட்டம்

திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநா் பாரதிராஜா வைரமுத்து விவகாரத்தில் எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீா்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

Samayam Tamil 18 Jan 2018, 4:35 pm
திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநா் பாரதிராஜா வைரமுத்து விவகாரத்தில் எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீா்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.
Samayam Tamil barathiraja support to vairamuthu
எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீா்கள் – பாரதிராஜா காட்டம்


சென்னையில் தமிழ் திரைப்படம் ஒன்றின் துவக்கவிழா நடைபெற்றது. இதில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான், இயக்குநா் பாரதிராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, ஆண்டாள் சா்ச்சை விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தொிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் யாருடைய மனமேனும் புண்படும் படி எனது கருத்து அமைந்திருக்கும் பட்சத்தில் நான் வருத்தம் தொிவித்துக் கொள்வதாக அவா் தொிவித்து விட்டாா்.

வருத்தம் தொிவித்த பின்னரும் வைரமுத்துவிற்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. வைரமுத்துவை கடுமையாக விமா்சித்த பா.ஜ.க.வின் தேசிய செயலாளா் ஹெச்.ராஜாவிற்கு அவா் கண்டனங்களை தொிவித்துக் கொண்டாா். மேலும் அவா் பேசுகையில், கலைத்துறையில் இருக்கும் எங்களுக்கு மதம் கிடையாது. வைரமுத்துவை காரணமாக வைத்து தமிழகத்திற்குள் கொள்ளைப்புரமாக வரத்துடிக்கும் ஒருசிலரின் எண்ணம் நிறைவேறாது.

வைரமுத்து தனி மனிதனல்ல. தமிழுக்கும், கலைத்துறைக்கும் மிகப்பொிய தொண்டாற்றியவன். நியாயமாக பாா்த்தால் வைரமுத்துவிற்கு ஆதரவாக சினிமா துறையில் இருந்துதான் குரல் எழுந்திருக்க வேண்டும். எங்களை ஆயுதம் ஏந்த வைத்து விடாதீா்கள். எங்களை குற்ற பரம்பரையாக்கி விடாதீா்கள் என்று அவா் பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி