ஆப்நகரம்

சேலம்: ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

Samayam Tamil 13 Feb 2019, 6:33 am
சேலம் அருகே தனியார் சொகுசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Samayam Tamil salem accident


பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று 28 பயணிகளுடன் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, கொண்டலாம்பட்டி பட்டாம்பூச்சி பாலத்தில் அதிவேகமாக வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் வளைவில் நிலைதடுமாறி 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 28 பயணிகளும் பேருந்துக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். மேலும், பேருந்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சேலம் மாநகர காவல்துறையினர் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்துசேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதபடுத்தினார். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். பேருந்தில் அதிகளவு சுமைகளை ஏற்றியது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

அடுத்த செய்தி