ஆப்நகரம்

அஇஅதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Aug 2018, 9:15 pm
சென்னை : அதிமுக செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Samayam Tamil AIADMK meeting


அதிமுக செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அஇஅதிமுக செயற்குழுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஏ.கே.போஸ் உள்ளிட்ட 120 பேருக்கு இரங்கல் தீர்மானம்.
கேரள மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு, முன்னாள் முதல்வர் அண்ணா, பெரியார் ஆகியோருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின் போது அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் என முதல்வர் எடப்பாடி. கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி