ஆப்நகரம்

பாரதியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தரின் உறவினர் மதிவாணன் மீது வழக்கு பதிவு

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Samayam Tamil 4 Feb 2018, 1:05 pm
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு லஞ்சம் பெற்றதாக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil bharathiar university vice chancellor relative mathivanan registered bribe case
பாரதியார் பல்கலைகழகத்தின் துணை வேந்தரின் உறவினர் மதிவாணன் மீது வழக்கு பதிவு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணிபுரிந்து வந்தவர் கணபதி. இவர், சுரேஷ் என்பவரிடம் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று துணைவேந்தர் அலுவலகத்தில் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது, துணைவேந்தர் கணபதி, லஞ்சப் பணத்தை கிழித்து கழிப்பறையில் போட்டுள்ளார். இதை அடையாளம் கண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கழிப்பறையிலும் சோதனை நடத்தினர்.
தொடர்ந்து கையும் களவுமாக பிடிபட்ட கணபதியை நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பாரதியார் பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இவர் முன்பே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி