ஆப்நகரம்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது: பாரதிராஜா

காவிரி விவகாரத்தில் மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

TNN 14 Sep 2016, 1:48 am
சென்னை : காவிரி விவகாரத்தில் மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
Samayam Tamil bharathiraja statement about cauvery issue
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு வருத்தமளிக்கிறது: பாரதிராஜா


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களின் மீதும், தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் கடந்த ஒரு வாரமாக நிலவிவரும் பதற்றத்தையும் பார்த்தும், மெளனத்தைக் கடைபிடிக்கும் மத்திய அரசின் போக்கு மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்டு இந்த விவகாரத்தில் நிரந்தரமான முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசியல் தலைவர்கள் கட்சி சார்பற்று இந்த விவகாரத்தில் நல்ல முடிவை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தமிழகத்திலேயே தமிழர்கள் சிறுபான்மையினர் ஆகியிருக்கிறார்களா என்னும் அச்சம் நிலவுகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும், வன்முறை கட்டுக்கடங்காமல்சென்று, கர்நாடகத்தில் தமிழர்கள் மிகவும் துயருற்றிருக்கிறார்கள்.

தமது பகுதியை தாமே ஆண்டுகொள்ளும் முடிவை தமிழ் இளைஞர்கள் எடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி