ஆப்நகரம்

ஆண்கள் கழிவறைக்கு பாரதியார் படம், சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்கள்!

திருச்சியில் தமிழ்நாடு சுற்றுலா நலத்துறை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் திறந்து வைத்த ஸ்மார்ட் கழிவறை வாசலில் பாரதியார் படம் வைக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

Samayam Tamil 13 Jan 2020, 12:26 pm
நாட்டில் பல்வேறு நகரங்களை மேம்படுத்த மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்காகக் குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிச் சம்பந்தப்பட்ட நகரங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
Samayam Tamil Bharathiyar-fi


அதன்படி திருச்சி தேர்வு செய்யப்பட்டு, அங்கு நகரத்தை ஸ்மார்டாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இலவச இணைய வசதி, உள்ளிட்டவற்றை வழங்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஸ்மார் கழிவறை அமைக்கும் பணி நடந்தது. தலா ஒரு கழிவறை வளாகத்திற்கு ரூ. 10 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. இதன்படி கட்டி முடிக்கப்பட்ட ஒரு ஸ்மார்ட் கழிவறையை அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜனும், வளர்மதியும் திறந்து வைத்தனர்.

‘குரூப் 4’ முறைகேடு விசாரணை தொடங்கியது!

இந்த கழிவறையில் ஆண்கள் பகுதியில் அடையாளத்திற்குப் பாரதியார் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதிர்ந்துபோன அப்பகுதியினர், இதுகுறித்து அவர்களுக்குள் விவாதித்துக் கொண்டனர். இந்த செயல் குறித்து திருச்சி மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அந்த படம் பாரதியார் படமில்லை என மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், அந்த படம் அங்கிருந்து அகற்றப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அந்த கழிவறை வளாகத்தில் ஆண்கள் கழிவறையைக் குறிப்பிட 3 இடங்களில் பாரதியாரின் படம் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட வடிவில் ”ஏர் உழும் உழவன்” - உலக சாதனை படைத்து ஆச்சரியம்!

இதைக் கவனிக்காமல் இந்த கழிவறையை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்த அமைச்சர்களின் செயலை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கண்டித்து கருத்துகளை அடுக்கி வருகின்றனர்.

அடுத்த செய்தி