ஆப்நகரம்

பைக்கில் வந்தவரை கத்தியால் தாக்கி ரூ.60 லட்சம் பணம் கொள்ளை!

சென்னை, ஏழுகிணறு பகுதியில் பைக்கில் வந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ.60 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Samayam Tamil 2 Nov 2018, 6:26 pm
சென்னை, ஏழுகிணறு பகுதியில் பைக்கில் வந்தவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் தாக்கிவிட்டு அவரிடமிருந்து ரூ.60 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Samayam Tamil attack


சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரஃபீக் கான். குறைந்த விலையில், செல்போன்கள் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரஃபீக்கின் உறவினர் ஜாஃபர் என்பவரிடமிருந்து ரூ.60 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு பைக்கில் ஏழுகிணறு பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அணைக்கரன் தெருவிற்கு அருகில் சென்ற போது, இரவு 10.45 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை கத்தியால் தாக்கிவிட்டு கையிலிருந்த பணப்பையை பறித்துக்கொண்டு வேகமாக சென்றுள்ளனர். கத்தியால் தாக்கிதால், ரத்த வெள்ளத்தில் துடித்த ரஃபீக் கான் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஏழுகிணறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி