ஆப்நகரம்

மொய் வைக்கிறவங்களுக்கு இனி கம்ப்யூட்டர் ரசீது!

மதுரை செக்கானூரணி பகுதியில் நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டு உள்ளது.

TNN 12 Mar 2017, 3:38 pm
மதுரை : மதுரை செக்கானூரணி பகுதியில் நடந்த காதணி விழாவில் மொய் வைப்பதற்கு கம்ப்யூட்டரில் ரசீது வழங்கப்பட்டு உள்ளது.
Samayam Tamil bill for ear piercing ceremony gift
மொய் வைக்கிறவங்களுக்கு இனி கம்ப்யூட்டர் ரசீது!


அனைத்தும் இப்போது கணினி மையமாகி வருகிறது. கடைகள் மற்றும் வர்த்தகம் செய்யும் போது கிரிடிட், டெபிட் கார்டுகள் மூலம் நாம் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தவது வழக்கமாகி விட்டது.

இதுபோன்ற சூழலில் திருமணம், காதணி விழா போன்ற விழாக்களுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு தொகையை, அந்த விழா நடத்தும் வீட்டார் ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வது வழக்கம்.



இப்படி விழா நடத்துவோர் எழுதி வைத்துக்கொள்வதோடு தற்போது நாம் அளிக்கும் அன்பளிப்புக்கு பில் கொடுக்கும் மொய் சாஃப்ட்வேர் இப்போது ரெடியாகியுள்ளது.

மதுரை செக்கானூரணி பகுதியில் நடந்த காதணி விழாவில், விருந்தினர் அளித்த அன்பளிப்புக்கு கணினி ரசீது வழங்கி அசத்தியுள்ளனர் மதுரைக்காரங்க.

அடுத்த செய்தி