ஆப்நகரம்

வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி; டெக்னாலஜி மயமாகும் தமிழக அரசுப் பள்ளிகள்!

சென்னை: அரசு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 8 Nov 2018, 9:26 am
2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவி முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
Samayam Tamil Biometric


இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்தியது. அப்போது பயோமெட்ரிக் கருவி அல்லது டாப் என்ற கணினி மூலம் வருகைப் பதிவு நடத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து ரசுப் பள்ளிகளில் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 3,688 உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 41,805 பேர் பயன்பெறுவர்.

இதேபோல் 4,040 மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 774 பேரும் பயன்பெறுவர். இதற்காக ரூ.15.30 கோடி செலவிடப்பட்டு பயோமெட்ரிக் முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டது.

இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை தேசிய தகவல் தொடர்பு மைய முதுநிலை தொழில்நுட்ப இயக்குநர் மற்றும் தகவலியல் அதிகாரி கேட்டுக் வழங்கினார். அதையே பள்ளிக்கல்வி இயக்குநரும் பரிந்துரை செய்தார்.

இவற்றை பரிசீலித்து, 7,728 பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவியை பொருத்தி ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி